Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

ஜுலை 09, 2021 12:08

ஈரோடு: ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் என்கிற சரவணன் (37). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் தான் குடியிருக்கும் பகுதியில் அருகில் வசிக்கும் 12 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா விசாரணை நடத்தினார்.

அப்போது கட்டிட தொழிலாளி சரவணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்